சொல்ல சொல்ல கேட்காமல் கோவை அதிமுகவினர் செய்த செயல்.! திகைப்பில் திமுகவினர்.!  - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் கோவையில் மீண்டும் போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு கிளம்பியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக திமுகவையும், ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மர்ம நபர்களால் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள் இணையதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து திமுகவினர் காவல் நிலையத்தில்புகார் அளித்தனர். அத்துடன் உதயநிதி தலைமையில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில், பேசிய உதயநிதி திமுகவை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டால், நாங்களும் பதிலுக்கு ஓட்டுவோம் என்று எச்சரித்து இருந்தார். உதயநிதி எச்சரித்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மீண்டும் ஸ்டாலினை படு மோசமாக விமர்சித்து நகரம் முழுவதும் கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 

அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா காலத்தில் அயராது உழைத்தார் எனவும், ஸ்டாலின் விக் வைத்துக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார் என்றும் மிகவும் கிண்டலாக கூறப்பட்டு இருக்கின்றது. இதை யார் செய்தார் என்று தெரியவில்லை. தற்போது இது இணையத்தில் வைரலாகி பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai Stalin comedy poster issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->