கொடுமை.. ஆணுக்கு ஆபாச வீடியோ மிரட்டல்.! கோவையில் பகீர் சமபவம்.!
kovai men police complaint
கோவை மாவட்டத்தில் கே.கே.புதூர் பகுதியில் வாலிபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வயது 29. இவர் புகார் மனு ஒன்றை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் தான் காந்திபுரம் 100 அடி ரோட்டில் ஒரு பார்சல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், தனது நெருக்கமான நண்பரின் மனைவி மீது ஈர்ப்பு ஏற்பட்டதாகவும், பின்னாளில் அது கள்ளக்காதலாக மாறி விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், "என் நண்பர் வீட்டில் இல்லாத நேரங்களில் அடிக்கடி நாங்கள் இருவரும் சந்தித்து நெருக்கமாக இருப்போம். இதுபற்றி என் நண்பருக்கு தெரியவர அவர் எங்கள் இருவரையும் கண்டித்தார். இருப்பினும் நாங்கள் அதைப் பொருட்படுத்தாமல் உல்லாசமாக இருந்து வந்தோம்.
இதை தெரிந்து கொண்ட நண்பர் ஒரு நாள் நான் வீட்டில் தனியாக இருந்த போது எங்களுடைய சில நண்பர்களுடன் வந்து என்னை தாக்கி அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். அத்துடன் என்னை மிகவும் ஆபாசமாக வீடியோ எடுத்து 2 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார்.
பணம் கொடுக்கவில்லை என்றால் அந்த ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன் என்று தெரிவித்துள்ளார். எனவே, இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
kovai men police complaint