கும்பகோணம் | இருதரப்பினர் இடையே கடும் மொத்தம்! படுங்காயங்களுடன் 6 பேருக்கு சிகிச்சை! - Seithipunal
Seithipunal


கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினர் மோதி கொண்டதால் பெரும் பாரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பதற்றத்தை தணிக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருவோணம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர், நடந்து சென்ற நபர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

இதனால், இருவருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்படவே, பின்னர் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.

இதில், படுகாயமடைந்த இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இரண்டு பேர்களின் ஆதரவாளர்களும் மருத்துவமனை வளாகத்திலேயே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

முதல் கட்ட தகவல் படி இரு தரப்பினரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வைத்துள்ளது. மேலும் இந்த மோதல் சம்பவத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

படுகாயம் அடைந்து அனைவரும் அதே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பதட்டத்தை தணிக்க மருத்துவமனையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kombakonam thiruvonam clash


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->