நீச்சல் பழக சென்ற சிறுவனுக்கு நிகழ்ந்த விபரீதம்.. நாமக்கல் அருகே நிகழ்ந்த சோகம்..!
Kills boy who went swimming
கல்குவாரியில் நீச்சல் பழகிய சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு திருமணமாகி சுராஜ் என்ற மகன் இருக்கிறான். சுராஜ் அங்குள்ள பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், சுராஜ் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றுள்ளார். சுராஜுக்கு நீச்சல் தெரியாததால் அவர் நீச்சல் பழகியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மற்றவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சுராஜூன் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Kills boy who went swimming