ஈராண்டுக்கு முன்னர் மயமான சிறுமி.! மதுரையில் கண்டறிந்த போலீசுக்கு அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் கொழிஞ்சாம்பாறை பகுதியைச் சேர்ந்த 14 வயது பெண் கடந்த 2019 ஆம் ஆண்டில் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஆனால், அந்த பெண் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. தற்போது இதற்காக சிறப்பு படை அமைத்து சைபர் செல் உதவியுடன் துரித விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மாயமான சிறுமி குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

அந்த காணாமல் போன சிறுமி மதுரை அருகே 4 மாத கைக்குழந்தையுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுமியிடம் விசாரணை நடத்திய போது, தனக்கு தெரிந்த செல்வன் என்ற வாலிபருடன் ஊரை விட்டு கிளம்பி வந்து மதுரையில் வசித்து வந்துள்ளார். 

இந்த பெண்ணை கடத்திய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அழைத்துவரப்பட்ட இந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala girl found in madurai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->