பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டலாம் னு இருந்தேன்... கம்யூனிஸ்ட் கட்சி காமுகன் பகீர் வாக்குமூலம்.! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கல்லூரிகள் கொரோனா மையங்களாக மாற்றப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியில் இருக்கும் பாறைசாலை ஸ்ரீ கிருஷ்ணா பார்மசி என்ற கல்லூரி கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக செயல்பட்டு வருகிறது. 

கேரளாவில் உள்ள செங்கல் பகுதியை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் ஷாலு என்பவர் இங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதே கொரோனா தடுப்பு மையத்தில் 20 வயது இளம்பெண் அனுமதியாகியுள்ளார். 

இன்று பெண்மணி குளித்துக்கொண்டு இருக்கையில், குளியலறையில் அலைபேசி மறைத்துவைக்கப்ட்டு இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். பின்னர் அதனை சோதிக்கையில், தான் குளித்துக்கொண்டு இருந்த வீடியோ பதிவாகியுள்ளதை கண்டறிந்துள்ளார். 

அலைபேசியை எடுத்துக்கொண்டு சுகாதாரத் துறை அதிகாரியிடம் புகார் தெரிவிக்கவே, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஷாலுவின் அலைபேசி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அவனிடம் மேற்கொண்ட விசாரணையில், தற்போது எடுக்கப்பட்ட சோதனையில் நெகட்டிவ் என்று சான்றிதழ் வந்துள்ள நிலையில், இன்று குளியறையில் விடியோவாக இளம்பெண் குளிப்பதை படமாக்கி, அவரை மிரட்டலாம் என்றும், வீடியோ எடுத்தவுடன் வீட்டிற்கு சென்றுவிடலாம் என்றும் நினைத்துள்ளது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து காமுக கொடூரனை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Communist party member plan to Intimidation girl police arrest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->