10ற்கும் மேல் ஆண் நண்பர்களுடன் சல்லாபம்..! வெறித்தனம் காட்டிய கள்ளக்காதலன்.!
kavitha connection with 10 boyfriends
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் அருகே கவிதா என்ற பெண் திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் இருந்துள்ளார். கணவருடன் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு தனியாக பிரிந்து வந்துள்ளார். குழந்தைகளை கணவருடனே விட்டுவிட்டு நான்கு வருடமாக தூத்துக்குடியில் ஒரு வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளார். அங்கிருக்கும் லாரி ஷெட் ஒன்றில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிந்து வருகின்றார்.
அதன் பின்னர் எட்வின் என்பவருடன் பழக்கம் ஆகி சென்ற வருடம் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் திடீரென கவிதா காணாமல் போயுள்ளார். எட்வின் அவரை தேடி வந்துள்ளார். விவேகானந்தா நகரில் இருக்கும் ஒரு வீட்டில் கவிதா சடலமாக கிடந்தார் என்று காவல்துறைக்கு தகவல் வந்தது. உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். அடையாளம் தெரியாத அளவிற்கு கவிதாவின் உடல் எரிந்து போய் இருந்தது.
விசாரணையில் கருப்பசாமி என்ற ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு வந்து போவதாக கூறியுள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கவிதா வேலை பார்க்கும் இடத்தில் நிறைய ஆண் நண்பர்கள் உடன் நெருக்கமாக பழகுவாள். அனைவரிடமும் தன்னுடைய நம்பரை கொடுத்து வைத்திருந்தார். அப்படித்தான் நானும் பழக்கமானேன். இந்த விஷயம் எட்வினுக்கு தெரிந்ததால் கவிதாவை கண்டித்தார். எட்டாம் தேதி எட்வின் வேலைக்கு சென்ற பின்னர் என்னை போன் பண்ணி வரச் சொன்னார்.
அவனிடமிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார். எனவே, நான் தனியாக வீடு எடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு கவிதாவை குடி வைத்தேன். இருவரும் அங்கே தங்கினோம். பத்தாம் தேதி இரவு இருவரும் அங்கே தனியாக இருக்கையில் கவிதாவிற்கு அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது. முதலில் கேட்கவில்லை. பின்னர் ஐந்து போன் கால்களை எடுத்து சிரித்து சிரித்துப் பேசினார். விசாரித்ததற்கு அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா என்று புதிய புதிய உறவு முறைகளை கூறி சமாளித்தார். பிறகு ஒரு போன் கால் வந்தது அதிக நேரம் சிரித்து சிரித்து பேசிக் கொண்டு மெல்லிய குரலில் பேசியதால் எனக்கு கோபம் வந்தது.
அருகில் இருக்கும் விறகுக் கட்டையை எடுத்து தலையில் ஓங்கி அடித்தேன். அக்கம்பக்கத்தினரிடம் இதனை கூற வெளியே செல்ல முயன்றார். உடனே நான் கழுத்தை நெரித்துக் கொன்று மண்ணெணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டேன் என கூறியுள்ளார். கவிதாவுக்கு பத்திற்கும் மேற்பட்ட ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள் என்றும், கணவன், காதலன் எட்வின், கள்ளகாதலன் தவிர மீதம் இருக்கும் அந்த பத்து பேர் யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
kavitha connection with 10 boyfriends