#தமிழகம் || காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த நாடக காதலன் தலைமறைவு.!  - Seithipunal
Seithipunal


காவேரிப்பாக்கம் அருகே, கல்லூரி மாணவி காதலிக்க மறுத்ததால், கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற நாடக காதலன் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்து உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் இருபத்தொரு வயது கல்லூரி மாணவி, காவிரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் கல்லூரி மாணவி தனது வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் என்ற நாடக காதலன் (23 வயது) கோவிலுக்கு வந்த கல்லூரி மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.

ஆனால் கல்லூரி மாணவி அந்த நாடக காதலனை காதலிக்க மறுப்புத் தெரிவித்ததுடன், இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த காதலன் நிதீஷ் குமார், தன் கையில் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் மாணவியின் கழுத்தை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார். 

இதில் மாணவி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக மாணவியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே காவேரிபாக்கம் காவல் நிலைய போலீசார் தப்பி ஓடிய நாடக காதலன் நிதிஷ் குமாரை கைது செய்யத் தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KAVERIPAKKAM COLLEGE GIRL ATTEMPT MURDER


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->