"பகுத்தறிவு சுயமரியாதை க்ரூப்" பெரியாரிஸ்டுகளை கழுவி ஊற்றிய நடிகை கஸ்தூரி!!
kasthuri tweet about periyarist
நடிகை கஸ்தூரி சில நாட்களாகவே அரசியல், சமுதாய விஷயங்கள் என ஈடுபட்டு கொண்டிருக்கிறார். மேலும், சாதிய ரீதியான சில விஷயங்களுக்கும், அவ்வப்போது கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளார்.
சாதியை பற்றி பேசுவதும், பேசாமல் இருப்பதும் அவரவர் உரிமை என்ற ரீதியில் கருத்து தெரிவிக்கும் கஸ்தூரி, தற்பொழுது அவரது பதிவுகளுக்கு வந்த கருத்துக்களை குறித்து ஒரு செய்தியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதனை பல்வேறு தரப்பினரம், ஆதரித்துவருகின்றனர். இதில் பெரியரிஸ்டுகளாக தங்களை அடையாளப்படுத்தி கொள்ளும் இருவர் மிக தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி நடிகை கஸ்தூரியை விமர்சித்துள்ளனர். இதனை குறிப்பிட்டு நடுங்கி கஸ்தூரி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, "அது என்னவோ தெரியலை. தரக்குறைவான தனிமனித தாக்குதல்களை அடுக்கும் கனவான்கள் 100க்கு 90 பேர் பகுத்தறிவு/சுயமரியாதை க்ரூப்பாவே இருக்கிறார்கள்...
என்ன செய்ய, முன் ஏறு போகும் வழியில்தானே பின்னேறு போகும். தலைவனுக்கு சற்றும் சளைக்காத திதிசொ க்கள். "என அதில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
kasthuri tweet about periyarist