சமாதானம் பேச வந்த பெண்ணின் தந்தையுடன் தெனாவட்டு பேச்சு.. பரபரப்பு சம்பவத்தின் பகீர் பின்னணி.!
Karur Young Boy Hariharan Murder due to Love Issue Police Investigation
கரூரில் உள்ள காமராஜர் சாலையில் சலூன் கடை நடத்தி வருபவர் ஜெயராமன். இவரது மகன் ஹரிஹரன். பழைய இரும்பு பேப்பர் மொத்த வியாபாரம் செய்யும் வேலனின் மகள், பள்ளிக்கு சென்று வரும் வேளையில், ஹரிஹரனின் காதல் வலையில் விழுந்துள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே, மாணவியின் எதிர்காலம் மேற்கோள்காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது கொரோனா விடுமுறையில் வீட்டில் இருந்த மாணவிக்கு அறிவுரை வழங்கி வந்துள்ளனர்.
தற்போது மாணவி கல்லூரியில் சேர்ந்து இரண்டு மாதம் ஆகும் நிலையில், காதலை கைவிட்டு படிப்பில் நாட்டம் செலுத்த துவங்கியுள்ளார். ஆனால், ஹரிஹரன் காதலில் உறுதியாக இருப்பதாக கூறி தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் தொடர்பாக மாணவி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, புதன்கிழமை அங்குள்ள கோவிலுக்கு வருமாறு மாணவியின் தந்தை ஹரிஹரனுக்கு அழைப்பு விடுக்கவே, தனது மகளுடன் கொண்ட காதலை கைவிட்டு விடுமாறும், மகளை நிறைய படிக்க வைக்க தங்களின் தரப்பில் ஆசைப்படுவதாகவும் சமாதான பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
ஆனால், இந்த சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாத ஹரிஹரன், நான் அப்படிதான் செய்வேன், உங்களால் முடிந்ததை செய்து பாருங்கள் என்று சமாதானம் பேச வந்தவரிடம் தெனாவட்டாக பேசியுள்ளான். இதனை வேலனுடன் வந்திருந்த பெண்ணின் பெரியப்பா சங்கர் மற்றும் உறவினர்கள் சிலர் ஆத்திரமடைந்து ஹரிஹரனை நடுரோட்டில் அடித்து நொறுக்கியுள்ளனர்.
ஆத்திரத்தில் கொதித்துப்போய் இருந்த பெரியப்பா சங்கர், தான் மறைத்து கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து ஹரிஹரனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை கண்டு சகித்துக்கொள்ள முடியாத பெண்வீட்டார் சிலர், ஹரிஹரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஹரிஹரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த ஹரிஹரனின் பெற்றோர், மகனின் உடலை பார்த்து கதறி அழுத நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தை வேலன், பெரியப்பா சங்கர், தாய்மாமன் கார்த்திகேயன், மாமா வெள்ளைச்சாமி ஆகியோரை கைது செய்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Karur Young Boy Hariharan Murder due to Love Issue Police Investigation