கல்லைப்போட்டு மனைவி கொலை.. இரயில் தண்டவாளத்தில் கணவனின் பிணம்.. கரூரில் சோகம்.!!
Karur Wife Murder by Husband and he Suicide Died 30 July 2021
மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த கணவன், ஓடும் இரயில் முன்பு பாய்ந்து உயிரை மாய்த்த சம்பவம் நடந்துள்ளது.
கரூரை சார்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சின்னப்பொண்ணு. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்த சுப்பிரமணியன், அவ்வப்போது வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும், வேலைக்கு சென்று வரும் வருவாயை வீட்டில் கொடுக்காமல் மதுபானம் அருந்தி வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்றும் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், மனைவியின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்து இருக்கிறார். பின்னர் சுப்பிரமணி அங்கிருந்து தப்பி சென்றுள்ளான்.
தாய் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த இளைய மகன், காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் சின்னபொண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தலைமறைவாக இருந்த பாலசுப்பிரமணியனை காவல் துறையினர் தேடி வந்த நிலையில், கரூர் - திண்டுக்கல் இரயில் பாதையில் தலை நசுங்கிய நிலையில் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மேற்கொண்ட ஆய்வில், அது சுப்பிரமணியனின் உடல் என்பது உறுதியானதை அடுத்து, மனைவியை கொலை செய்து பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று அதிகாரிகள் உறுதி செய்தனர்.
சுப்பிரமணியனின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவ அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Karur Wife Murder by Husband and he Suicide Died 30 July 2021