தங்கைக்காக உயிரை விட்ட அண்ணனின் நண்பர்... கஞ்சா கும்பலின் வெறிச்செயல்..!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின், கரூா் மாவட்டம் தாந்தோணிமலை வ.உ.சி தெருவில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது மகன் தான் மணிகண்டன். இவருக்கு 19 வயது இவரும் தாந்தோணிமலை ஜீவா நகரைச் சேர்ந்தவர் தினேஷ்  என்பவரும் மிக நெருங்கிய நண்பர்கள். மணிகண்டன்  கரூரில் இருக்கும் தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில், தினேஷின் தங்கையை அதே பகுதியில் உள்ள காளிதாஸ் என்னும் இளைஞர் ஒருவர் ஒருதலையாகக் காதலித்திருக்கிறார். இது தொடர்பாக அந்த பெண் அவரது அண்ணனிடம்  தெரிவிக்கவே தினேஷ், மணிகண்டன் உள்ளிட்ட சில நண்பர்களுடன் சென்று காளிதாஸை எச்சரித்து விட்டு வந்திருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த  காளிதாஸ் கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவர்களை தாக்கியிருக்கிறார்கள்.

Image result for crime seithipunal

இதன் காரணமாக அனைவரும் தப்பித்துவிட மணிகண்டன் மட்டும் அந்த கும்பலிடம் சிக்கிக் கொண்டார். இதை தொடர்ந்து, மணிகண்டனை காளிதாஸ் மற்றும் அவர்களின் நண்பர்கள் சேர்ந்து கத்தியால் குத்திவிட்டுத் தப்பித்துவிட்டார்கள். மணிகண்டனை பார்க்க மீண்டும் அங்கு வந்த நண்பர்கள் அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்.

ஆனால், மணிகண்டன் சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து, காளிதாஸ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். மணிகண்டனை கொலை செய்யும் போது  அவர்கள் அனைவரும் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karur student killed by kanja group


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->