#BREAKING || கரூர் பள்ளி மனைவி தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம்., அதே பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கரூரில் கடந்த 19ஆம் தேதி பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் அந்த தற்கொலை கடிதத்தில், "எனக்கு தொந்தரவு கொடுத்தவர்கள் யார் என்று சொல்வதற்கு பயமாக உள்ளது., நான் வாழ்வதற்கு ஆசை, ஆனால் செல்கிறேன். இந்த பூமியில் வாழ்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தால்., நான் அனைவருக்கும் உதவி செய்து வாழ்வேன்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த கடிதம் மற்றும் அந்த மாணவி தற்கொலை தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து கரூர் பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக சற்று முன்பு, தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி பயின்ற அதே பள்ளியை சேர்ந்த கணித ஆசிரியர் சற்று முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட கணித ஆசிரியர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் தாயார், வேதியல் ஆசிரியர் தான் எனது மகளுக்கு தொல்லை கொடுத்து இருப்பார் என்று குற்றச்சாட்டு முன்வைத்து இருந்த நிலையில், தற்போது கணித ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KARUR SCHOOL GIRL SUICIDE CASE ONE MORE DEAD


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->