பட்டப்பகலில் வீடுபுகுந்து துணிகர கொள்ளை.. மக்களே பாதுகாப்பாக இருங்கள்..!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமம் ராஜநகர் பகுதியை சார்ந்தவர் ராஜாத்தி (வயது 52). இவர் வணிகவரித்துறையில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் வழக்கம்போல பணிக்கு சென்றுள்ளார். 

பின்னர் மீண்டும் மாலை நேரத்தில் வந்து பார்க்கையில், வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு, வீட்டிற்குள் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. இதில் பீரோவில் இருந்த மோதிரம், 2 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.11 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. 

இதனைப்போலவே அங்குள்ள இந்திரா நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் ராமசாமி (வயது 50) என்பவரின் இல்லத்தில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் அரை பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் தனித்தனியே புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur Robbery police investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->