3 வயது குழந்தையின் கண்முன்னே பெற்றோர்கள் துள்ளத்துடிக்க வெட்டிக்கொலை... கரூரில் பயங்கரம்.!!
Karur murder case police investigation
தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் உள்ள ராயனூர் தில்லைநகர் பகுதியை சார்ந்தவர் ரங்கநாதன் (வயது 37). இவர் ஏ.சி.மெக்கானிக்காக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவி தீபிகா (வயது 28). இவர்களுக்கு அக் ஷ்தா என்ற மூன்று வயதுடைய பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில மாதத்திற்கு முன்னதாக ரங்கநாதன், தனது குடும்பத்தாருடன் வெள்ளியணை அருகேயுள்ள மணவாடி அய்யம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறிய நிலையில், ரங்கநாதனின் பாட்டி பாப்பம்மாளுக்கு தில்லை நகர் பகுதியில் 4 சென்ட் நிலம் இருக்கிறது.
இந்த நிலத்தை தனது மகள்களான கண்ணம்மாள் மற்றும் ராணி ஆகியோருக்கு பிரித்து கொடுத்த நிலையில், கண்ணம்மாளின் மகன் ரங்கநாதன் மற்றும் தங்கை ராணியின் மகன்கள் பார்த்தீபன், கவுதமன், பிரவீன் ஆகியோருக்கு 10 வருடமாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த முன் விரோதத்தின் காரணமாக ரங்கநாதனின் வீட்டிற்கு வந்த சகோதரர்கள் மூவரும் ரங்கநாதன் மற்றும் அவரது மனைவி தீபிகாவை வெட்டி கொலை செய்துள்ளனர். இவர்களின் 3 வயது குழந்தை முன்னதாகவே இந்த கொடூர கொலை அரங்கேறியுள்ளது.
குழந்தையின் அழுகுரலை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்க்கையில் விஷயம் தெரியவந்துள்ளது. பின்னர் காவல் துறையினருக்கு தகவலை தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Karur murder case police investigation