மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்தவனை, நண்பனுடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய கணவன்.! - Seithipunal
Seithipunal


குளித்தலை அருகே மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக் கொலை செய்த நபர் மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை லாலாப்பேட்டை பகுதியை சார்ந்தவர் கதிர்வேலன். இவருக்கும், மகாதானபுரம் பகுதியை சேர்ந்த தர்மதுரை என்பவரின் மனைவிக்கும் தவறான தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து இவர்கள் இருவரும் அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், இதனால் தர்மதுரைக்கும் அவரது மனைவிக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கதிர்வேல் வீட்டிற்கு சென்ற தர்மதுரை மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணன், கதிர்வேலிடம் தனியாக பேசவேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர். 

அங்குள்ள பிள்ளபாளையம் வாய்க்கால் பகுதிக்கு அழைத்து சென்று, கதிர்வேலை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதன்பின்னர், அவரது உடல் பாகங்களை வாய்க்காலில் வீசி விட்டுச் சென்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் கதிர்வேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், கொலையை செய்த தர்மதுரை, அவரது நண்பன் கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur Kulithalai Kathivelan Murder due to Affair Police Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->