கரூர்: கள்ளகாதலி வெட்டிக்கொலை - முதியவர் கைது..!
Karur Kulithalai Aged Man Ramasamy Murder his Affair Woman Police Investigation 3 August 2021
பேசமறுத்ததால் கள்ளக்காதலியை வெட்டி கொலை பரபரப்பு சம்பவம் குளித்தலை அருகே நடந்துள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கடவூர் சேவாப்பூரை சேர்ந்தவர் ராமசாமி, இவருக்கு வயது 70. ராமசாமிக்கு சோலையமாள் என்ற மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனர். ராமசாமிக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனியம்மாள் என்பவருக்கும் நெடுங்காலமாக பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராமசாமியுடன் பெண்மணி கருத்து வேறுபாட்டில் விலகி இருந்துள்ளார். இதனால் ராமசாமியுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். தன்னிடம் பேசுமாறு ராமசாமியும் பலமுறை வற்புறுத்தியுள்ளார், இருப்பினும் பழனியம்மாள் பேசவில்லை.
நேற்று வழக்கம் போல ராமசாமி தன்னிடம் பேசுமாறு பழனியம்மாளிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவரிடம் பழனியம்மாள் பேசவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ராமசாமி நேற்றிரவு அரிவாளால் பழனியம்மாளை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடந்த பழனியம்மாள் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் ராமசாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Karur Kulithalai Aged Man Ramasamy Murder his Affair Woman Police Investigation 3 August 2021