கரூர்: 16 வயது சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம்.. மிரட்டலால் பயந்த சிறுமிக்கு இறுதியில் அரங்கேறிய சோகம்.!
Karur Kulithalai 16 Aged Child Sexual Abused Police Arrest Culprit Thirumurugan
16 வயது சிறுமியை காமுகன் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை சிவாயம் பகுதியை சார்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சிவாயம் ஊருக்கு அருகேயுள்ள கிராமம் கோவில்பட்டி. இந்த கிராமத்தை சார்ந்தவன் திருமுருகன். திருமுருகன் சம்பவத்தன்று சிவாயம் கிராமத்திற்கு வருகை தந்திருந்த நிலையில், சிறுமியின் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் வீட்டினுள் நுழைந்து சிறுமியை கத்திய காண்பித்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இந்த விஷயம் குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி சென்றுள்ளான். பயந்துபோன சிறுமியும் இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்து வந்த நிலையில், இதனை உபயோகப்படுத்திக்கொண்ட கயவன் தொடர்ந்து பலமுறை சிறுமியிடம் அத்துமீறி இருக்கிறான். இவ்வாறான செயல் சில நாட்களாக தொடர்ந்து வந்த நிலையில், சிறுமிக்கு பிறப்புறுப்பில் அதிகளவு வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி உடல்நலக்குறைவுடன் இருக்கவே, சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகியிருப்பதை உறுதி செய்தனர். இதனைக்கேட்ட பெற்றோர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகவே, இந்த விஷயம் தொடர்பாக குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் காமுகன் திருமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமுருகனுக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கயவன் இப்படியான கொடூரத்தை அரங்கேற்றி இருக்கிறான்.
பெண் குழந்தைகள் தங்களுக்கு பாலியல் ரீதியாக அல்லது காதல் ரீதியாக தொல்லைகள், மிரட்டல், மேற்கூறிய விஷயங்கள் போன்றவற்றை சந்தித்தால் பெற்றோரிடம் கூறுங்கள் அல்லது குழந்தைகள் நல மைய 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள். காமுகர்களால் உங்களுக்கு உடலளவில், மனதளவில் ஏற்பட்ட பிரச்சனை எதோ ஒரு சூழலில் மரணத்தையும் ஏற்படுத்தலாம். சுதாரித்து செயல்படுங்கள்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Karur Kulithalai 16 Aged Child Sexual Abused Police Arrest Culprit Thirumurugan