மூன்று நாள் விடிய விடிய... சிக்கிய ஆவணங்கள்.. கட்டுக்கட்டாக பணங்கள்..!! எவ்வுளவு மதிப்பு தெரியுமா?..!!
karur IT raid continue on third day
கரூர் மாவட்டத்தில் உள்ள வெண்ணைமலை பகுதியில் செய்யப்பட்டு வரும் ஷோபிகா தனியார் கொசுவலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனைப்போன்று கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் சிப்காட் மற்றும் சின்னராதபுரம் சாலை பகுதியில் இருக்கும் இடங்களில் கொசுவலை உற்பத்தியும் நடைபெற்று வருகிறது.
இந்த நிறுவனங்களில் உற்பத்தியாகும் கொசுவலைகள் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில்., இந்நிறுவனத்துடைய கிளை நிறுவனங்கள் மதுரை மற்றும் கோயம்புத்தூரில்., பிற மாநிலங்களிலிலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்கள் மட்டுமல்லாது காற்றாலை நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறது.
இதற்கான வருமான வரித்துறை கணக்குகளை ஆய்வு செய்த சமயத்தில்., வருமான வரிஏய்ப்பில் ஈடுபட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினத்தில் இருந்து கரூர்., கோயம்புத்தூர்., மதுரை மற்றும் திருச்சி போன்ற பகுதியில் செயல்பட்டு வந்த இதன் நிறுவனத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும்., இக்குழுமத்திற்கு உட்பட்ட அனைத்து இடத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
இதன் அடிப்படையில்., கொசுவலை நிறுவனமா மற்றும் கொசுவலை நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் பிற அலுவலகங்கள் போன்ற இடங்களில் அதிரடி சோதனையானது மேற்கொள்ளப்பட்டது. வெளிநபர்கள் அனுமதி மறுக்கப்பட்டு., காவல்துறையினரின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
இந்த சமயத்தில்., வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.23 கோடி மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில்., இதனைப்போன்ற பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும்., சோதனை மேற்கொண்ட பிற இடங்களிலும் பல கோடி ரூபாய் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சோதனையானது மூன்றாவது நாளாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
karur IT raid continue on third day