வெள்ளக்காடாக கரூர், நாமக்கல்.! போக்குவரத்து நிறுத்தம், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!
karur heavy rain fall
தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கரூர் நாமக்கல் மாவட்டத்தில் கொட்டி தீர்க்கும் மழையால், சாலைகளில் வெல்ல நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சேலம், நாமக்கல் சாலை போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தொடர்மழை காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.