அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை - கரூரில் துணிகர சம்பவம்..!
Karur Govt Employee Jewels Robbery by strangers Police Investigation
கரூரில் அரசு ஊழியர் வீட்டில் 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கரூர் மாவட்டம் மேர்கூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் கரூர் வட்டார கல்வி அலுவலகத்தில் உதவியாளராக உள்ளார். இவர் மனைவி பவுன் அரசு நடுநிலைபள்ளியில் தலைமையாசிரியராக உள்ளார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
சம்பவத்தன்று பவுன் தனது மகள்களுடன் பரமத்தி வேலூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். லோகநாதனும் கரூருக்கு சென்று விட்டார். இந்த நிலையில், லோகநாதன் திரும்பி வந்து பார்க்கும் பொழுது வீட்டின் பின்புற கதவு உடைக்கபட்டுருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியான லோகநாதன் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது, பீரோவில் வைத்திருந்த 20 ½ பவுன் நகைகள் களவு போயிருந்தது. இது குறித்து லோகநாதன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
English Summary
Karur Govt Employee Jewels Robbery by strangers Police Investigation