ஆற்றுமணலில் ஆரம்பித்து, உணவகம் சூறை.. கரூரில் திமுக அலப்பறை ஆரம்பம்.!
Karur DMK Supporters Demolish AIADMK Supporter hotel DMK Victory Atrocity Starts
தமிழகத்தில் வெளியான தேர்தல் முடிவுகள் படி திமுக ஆட்சியை அமைப்பது உறுதியான நிலையில், 7 ஆம் தேதி முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. திமுகவினர் கடந்த காலங்களில் செய்த நடவடிக்கைகளை பார்த்து பல்வேறு தரப்பினரும் அச்சத்தில் இருந்தனர். திமுக சார்பில் கரூர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கிய செந்தில் பாலாஜி, பலகட்சிகளுக்கு சென்று இறுதியாக திமுகவிற்கு வந்தார்.
தற்போது திமுக சார்பில் அவர் கரூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கையில் ஆற்று மணல் திருடுவது தொடர்பாக அதிகாரிகளை மிரட்டும் தோணியில் பேசியிருந்தார்.
இத்தகையை சூழலில், தேர்தலுக்கு முன்னதாகவே கரூர் தொகுதியில் திமுக - அதிமுக இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. மேலும், நாம் ஆட்சிக்கு வந்ததும் மணலை எந்த பிரச்சனையும் இல்லாமல் கொள்ளையடிக்கலாம் என்பதை போல பேசியிருந்தார்.
இந்நிலையில், கரூர் தொகுதியை சார்ந்த எம்.ஆர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர் உணவகம் ஒன்று நடத்தி வரும் நிலையில், அவரது உணவகத்திற்கு சென்ற திமுக உடான்ஸ்பிறப்புகள், உணவகத்தை அடித்து நொறுக்கி அங்கு பணியாற்றி வந்த ஊழியரின் மண்டையை உடைத்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பான தகவலை பாதிக்கப்பட்ட நபர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Karur DMK Supporters Demolish AIADMK Supporter hotel DMK Victory Atrocity Starts