மகன் இறந்த துக்கம் தாளாது, தந்தை நெஞ்சுவலியால் பலி.. கரூரில் சோகம்.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்திலுள்ள சின்னதாராபுரம் குஞ்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் பாலாஜி. பாலாஜி கரூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். 

இந்த நிலையில், பாலாஜி அவரது வீட்டில் பழுதடைந்து இருந்த ஸ்பீக்கரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட நேரத்தில், எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து பலியாகியுள்ளார். இந்த இறப்பு செய்தியை கேட்ட சிறுவனின் தந்தை செல்ல முத்து, அதிர்ச்சியடைந்து நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளார். 

இவர்கள் இருவரின் உடலும் கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விஷயம் தொடர்பாக சின்னதாராபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மகன் இறந்த சோகத்தில் தந்தை உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur Chinnadharapuram Father died Son Death Shocking News Heart Attack


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->