16 வயது சிறுமிக்கு நாடக காதல் வலை... ஊர் ஊராக சுற்றி, ரோந்து காவல்துறையிடம் சிக்கிய புள்ளிங்கோஸ்.!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியை சார்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு 16 வயதுடைய மகள் இருக்கிறார். இந்த சிறுமிக்கும், இதே பகுதியில் உள்ள இரும்பு கடையில் பணியாற்றி வரும் ஸ்டார்வின் (வயது 22) என்ற இளைஞரருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

மேலும், இந்த சிறுமியை வேண்டும் என்றே திட்டமிட்டு பகட்டான ஆடையை அணிந்து காதலில் விழ வைத்துள்ளான். இந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவரவே, சிறுமியிடம் படிக்கும் வயதில் காதல் என்பது தேவையில்லாத ஒன்று என்று அறிவுரை கூறியுள்ளனர். 

இதனால் நேற்று வீட்டினை விட்டு வெளியேறிய சிறுமி ஸ்டார்வினை சந்தித்து பேசவே, அவன் ஜான் என்ற நண்பரின் மூலமாக சிறுமியை இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது. ஜானின் குடும்பத்தினர் இது தொடர்பாக கண்டிக்கவே, நேற்று மாலை நேரத்தில் சிறுமியை சிவகங்கை பேருந்தில் அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து ஸ்டார்வினின் தகவலின் பேரில் சிவகங்கைக்கு அவரது அண்ணன் ராஜ்குமார் மற்றும் சக நண்பர்கள் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் காத்திருக்கவே, கண்காணிப்பு பணிக்கு வந்த காவல் துறையினர், சிறுமி மற்றும் இளைஞர்களை கண்டுள்ளனர். 

சந்தேகத்தின் கீழ் காவல் துறையினர் இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளையில், சிறுமி வீட்டினை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 5 இளைஞர்களை கைது செய்த காவல் துறையினர், சிறுமியை கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur Child girl Escape Love Affection boy Police arrest gang


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->