அதிமுகவா?.. அமமுகவா?... கருணாஸின் முடிவு என்ன?.. பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டையில் வைத்து முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர், நடிகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " சசிகலா என்னை முதல்வராக ஆக்கவில்லை. 

சட்டமன்ற உறுப்பினர்களால் நான் முதல்வர் ஆகியுள்ளேன் என்று தமிழக முதல்வர் பேசி வருகிறார். கூவத்தூரில் என்ன நடைபெற்றது?, அங்கிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலருக்கும் எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதல்வராக மாறினார் என்பது தெரியும். 

அங்கு என்ன நடந்தது என்பது தொடர்பான தகவலை நான் தெரிவிக்கமாட்டேன். கடந்த ஐந்து வருடத்தில் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. நாளையும் என்ன நடக்கும்? என்பதை தெரிவிக்க இயலாது. சசிகலா சென்னை வந்து, தமிழக அரசியலில் களமிறங்கியதும் எனது முடிவினை எடுப்பேன். 

சசிகலாவின் அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவித்த பின்னர் தான், எனது அரசியல் நிலைப்பாடு தொடர்பான தகவலை தெரிவிப்பேன். மக்களுக்கு சேவை செய்யவே அரசியல் உள்ளது. ரவுடிகளை அரசியலில் ஒருகட்சியினர் சேர்த்து வருகிறார்கள் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karunas MLA Pressmeet about his Politics Stand 27 Jan 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->