வாட்டாள் நாகராஜின் அட்டூழியம்.. உதகை, தாளவாடி வேண்டுமாம்.. காந்திய மக்கள் இயக்கம் போர்க்கொடி.!
Karnataka Politics Vattal Nagaraj Activity 12 Feb 2021
காந்திய மக்கள் இயக்கத்தின் செயல் தலைவர் டென்னிஸ் கோவில் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில், " கர்நாடகத்துடன் தாளவாடி, உதகையை இணைக்கக் கோரி இன்று (10 2 21) உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அந்த மாறிலத்தைச் சேர்ந்த வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மாநில எல்லைகளை ஈரமைப்பு செய்த போது பாதிக்கப்பட்ட தமிழகம், இன்னும் அதிலிருந்து மீளவில்லை.
அதற்குப் பிறகு மற்ற மாநிலப் பகுதிகளுக்கு கர்நாடகமும் மகாராஷ்டிரமும் உரிமை கொண்டாடுவது போல் தமிழகம் நடந்து கொள்ளவில்லை. இதை தமிழகத்தின் பலவீனம் என்று வாட்டாள் நாகராஜ் போன்றவர்கள் நினைத்தார்கள் என்றால், அது கடைந்தெடுத்த கயமைத்தனம் ஆகும்.
இவரைப் போன்ற குறுக்கு புத்திக்காரர்களை, வாக்கு அறுவடைக்காக கர்நாடக அரசியல்வாதிகள் கண்டும் காணாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. அண்டை மாநில மக்களுடன் இருக்கும் சகோதர உணர்வை தொடர்ந்து அழிக்கும் செயலில் ஈடுபட்டுவரும் வாட்டாள் நாகராஜ் மீது கர்நாடக அரசு தயக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்; நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், அது தேசிய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளைவிக்க முயலுகிற தீய சக்திகளை ஊக்குவிப்பதாகவே அமையும் என்றே மக்கள் மன்றத்தில் புரிந்து கொள்ளப்படும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Karnataka Politics Vattal Nagaraj Activity 12 Feb 2021