கணவனுக்கு தூக்க மாத்திரை, கள்ளகாதலனுக்கு..., அதீத ஆசையால் மூச்சுத்திணறி பறிபோன உயிர்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்காதலுக்கு கணவனை பலி கொடுத்து, 9 மாதம் கள்ளக்காதலனுடன் குடித்தனம் நடத்திய ஜோடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் டி. நரசிபுரா உனசூர் கிராமத்தை சார்ந்தவர் வெங்கடராஜு (வயது 50). இவருக்கும், மண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டனா பெல்லிகேரே கிராமத்தை சார்ந்த உமாவுக்கும் (வயது 28) என்பவருக்கும் கடந்த 10 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இவர்கள் இருவருக்கும் 8 வயது மகள் மற்றும் 6 வயது மகன் உள்ளனர். இந்நிலையில், கணவன் - மனைவியிடையே 22 வயது வித்தியாசம் இருந்ததால் அவ்வப்போது மனைவியின் நடத்தையில் சந்தேகப்படும் வெங்கடராஜு மனைவி உமாவிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.   

இதனால் ஒரு சமயத்திற்கு மேல் பொறுமையை இழந்த உமா, கணவரை பிரிந்து தாயாரின் வீட்டிற்கு சென்று வசித்து வந்துள்ளார். இதன்போது, பக்கத்து வீட்டில் வசித்து வந்த அவினாஷ் (வயது 28) என்ற வாலிபருடன் உமாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இவர்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது தொடர்பான தகவல் வெங்கடராஜுக்கு தெரியவரவே, இருவரையும் அவர் நேரில் அழைத்து கண்டித்துள்ளார்.

இதனை கண்டுகொள்ளாத கள்ளக்காதல் ஜோடி, அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளது. இந்த விஷயங்களால் ஆத்திரத்தில் இருந்த வெங்கடராஜு அவ்வப்போது உமாவுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனையடுத்து, வெங்கடராஜை கொலை செய்ய திட்டமிட்ட கள்ளக்காதல் ஜோடி, கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி பயங்கர திட்டத்தை தீட்டியுள்ளது. இவர்களின் தடித்தபடி, வெங்கடராஜுவிடம் இனிமையான மொழியில் பேசிய உமா, திருந்தி வாழலாம் என தாயாரின் வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

இதனைக்கேட்ட வெங்கடராஜும் மனைவி திருந்திவிட்டார் என்ற எண்ணத்தில் உமாவின் வீட்டிற்கு சென்ற நிலையில், அங்கு தூக்க மாத்திரை கலக்கப்பட்ட காபியை உமா கொடுத்துள்ளார். இதனைக்குடித்த வெங்கடராஜு சிறிது நேரத்தில் மயங்கி விழவே, அங்கு வந்த அவினாஷ் தலையணையால் வெங்கடராஜுவின் முகத்தை அழுத்தி மூச்சுத்திணறவைத்து கொலை செய்துள்ளார். உமாவும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார். பின்னர், அப்பகுதியில் உள்ள கிணற்றில் வெங்கடராஜுவின் உடலை தூக்கி வீசியுள்ளனர். 

பின்னர், மறுநாள் காலையில் கணவரை காணவில்லை என்று அக்கம் பக்கத்தில் நாடகம் அரங்கேற்றி இருந்த நிலையில், வெங்கடராஜுவின் உடல் கிணற்றில் இருந்துள்ளது. இதனால் கணவர் தற்கொலை செய்துகொண்டார் என அக்கம் பக்கத்தினரை உமா நம்பவைக்கவே, பிரேத பரிசோதனையில் தூக்க மாத்திரை விஷயம் தெரியவந்துள்ளது. மேலும், உடலில் கட்டையால் தாக்கப்பட்ட காயமும் உறுதியானது. காவல்துறையினர் தங்களை சந்தேக வளையத்திற்குள் வைத்ததை தெரிந்துகொண்ட உமா, தனது கள்ளக்காதலன் அவினாஷுடன் தலைமறைவாகியுள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக பன்னூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், 2 பேரையும் தேடி வந்தனர். கடந்த 9 மாதமாக தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த கள்ளக்காதல் ஜோடி நேற்று காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Mysore Affair Woman Uma Murder his Husband after 9 Month Illegal Affair Couple Arrest


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->