சொல்லச்சொல்ல கேட்காமல் மனைவியை பிசாசாய் படுத்திய முதல் கணவன்.. இரண்டாம் கணவனின் பகீர் செயல்.!!
Karnataka man murder by second husband of his wife
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பசவனகுடி சுப்பண்ணா செட்டி பகுதியில், நேற்று முன்தினம் ரத்த வெள்ளத்தில் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர்.
பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நிலையில், இறந்து கிடந்தவர் யார்?. அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்?, என்பது குறித்த விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், காவல்துறையினரின் விசாரணையில் கொலையானவர் சித்தராஜா (வயது 26) என்பது தெரியவந்துள்ளது. இவர் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள கொள்ளேகாலை பகுதியை சேர்ந்தவர் என்பதும், பெங்களூருவில் லாரி கிளீனராக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், பெங்களூருவைச் சார்ந்த லதா (வயது 28) என்ற பெண்மணியை சித்தராஜ் திருமணம் செய்திருந்த நிலையில், சித்தராஜ் தினமும் மது அருந்திவிட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதனால் சித்தராஜின் மீது ஏற்பட்ட விரக்தியால், லதா பிரிந்து சென்றுள்ளார்.
இதன் பின்னர் வியாபாரியான லட்சுமணன் என்கிற லட்சியை, லதா இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சித்தராஜா தினமும் லதாவிடம் தகராறு செய்துள்ளார். இதுமட்டுமல்லாது லதாவின் தாயிடம் சென்றும் தகராறு செய்துள்ளார்.
இந்த விஷயத்தினை லதாவின் இரண்டாவது கணவரான லட்சுமணன், சித்தராஜை பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால், லதாவிடம் சித்தராஜ் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததால், ஆத்திரமடைந்த லட்சுமணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சித்தராஜாவை ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள லட்சுமணன் மற்றும் அவரது நண்பர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Karnataka man murder by second husband of his wife