பலசரக்கு கடை நடத்தி வரன் விசாரிப்பில் எண்ணெய் ஊற்றி தீ வைத்த நபர்?. இளைஞர்களின் வில்லங்க போஸ்டர்.!
Kanyakumari Unmarried Youngster Poster with Angry
குளச்சல் அருகே திருமணத்திற்கு வரன் பார்க்க வரும் சம்பந்த விட்டார்களிடம் இல்லாததை பேசி அனுப்பி வைக்கும் நபர்களை கண்டித்து திருமணம் ஆகாத வாலிபர்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் நடந்துள்ளது.
ஊர்களில் குட்டி சுவரிலும், தேனீர் கடையிலும் அமர்ந்து திருமணத்திற்காக வரங்களை கொடுக்க வரும் நபர்கள் விசாரிக்கும் சமயத்தில், அவர்களின் மனதை மாற்றி அனுப்பி வைக்கும் சில யோக்கிய சிகாமணிகள் அனைத்து ஊர்களிலும் உண்டு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இவர்களின் செயல்களால் விரக்தியடைந்த சில இளைஞர்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டிய சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் அருகே இருக்கும் கிராமங்களில், அண்மைகாலமாக இளைஞர்களுக்கு பெண் பார்ப்பதும் - பெண் வீட்டார் விசாரிக்க வரும் சமயங்களில் ஆசாமிகள் புறம் பேசி வரன்களை தடுப்பதால் அவர்கள் எந்தவிதமான பதிலும் கூறாமல் சென்று விடுவதுமாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தங்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தும் பொருட்டு, " வரன்களை தடுக்க காத்திருக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி " என்று போஸ்டர் அடித்து ஒட்டி இருக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிச்சன் விளை, ஆயினி விளை பகுதியை சேர்ந்த இளைஞர்கள், அங்கு பலசரக்கு கடை நடத்தி வரும் ஒரு நபரின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து இருக்கின்றனர்.
அந்த போஸ்டரில், திருமண விலக்குவோர் சங்க தலைவர் என்றும், தொழில் திருமணம் வரனை தடுத்தல், உபதொழில் பலசரக்கு வியாபாரம் என்றும் சுயவிவரத்தை தெளிவாக அடித்து ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் அங்குள்ள குளச்சல் மற்றும் கருங்கல் பகுதியிலும் ஒட்டப்பட்டுள்ளது.
இதனைப் போன்று திருமணத்தை கெடுத்துவிடும் சில நபர்களை அடையாளப்படுத்த போவதாகவும் அந்த போஸ்டரில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கும் நிலையில், இந்த போஸ்டரை கண்ட உள்ளூர் பலசரக்கு வியாபாரியான சம்பந்தப்பட்டவர், எதிர்தரப்பு மீது மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kanyakumari Unmarried Youngster Poster with Angry