அதிமுக நிர்வாகி மர்ம மரணம்.. காரில் பிணமாக மீட்பு.. நடந்தது என்ன?..! - Seithipunal
Seithipunal


திருவட்டார் பேருந்து நிலையத்தில் காருக்குள் உயிரிழந்து கிடந்த அதிமுக நிர்வாகியின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பேருந்து நிலையத்தில், கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. ஓட்டுநரின் இருக்கையில் இருந்தவர் மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார். இதனையடுத்து, இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காரின் கதவை திறந்து உள்ளே பார்க்கையில், வாலிபர் உயிரிழந்து இருப்பது உறுதியானது. உயிரிழந்து கிடந்தவர் குறித்து விசாரிக்கையில், அவர் முதலார் பகுதியை புல்லாணிவிளையை சார்ந்த பென் ஷாம் என்பது தெரியவந்தது. 

இவர் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க இளைஞர் அணி இணைச் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர், அவர் மாரடைப்பால் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Thiruvattaru AIADMK District Youth Wing Secretary Died Mystery on Car near Thiruvattaru Bus stand


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->