திருட வந்த வீட்டில் கடும்பசி... மீன் குழம்பை வயிறு முட்ட சாப்பிட்டு சென்ற கொள்ளையர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பரைக்கோடு பகுதியை சார்ந்த 40 வயது நபர், நாகர்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் கார் பழுது பார்க்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் இருக்கும் சமையலறை கதவினை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்துளளனர். 

கணவன் - மனைவி இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில், கொள்ளையர்கள் வீட்டில் பணம் மற்றும் நகை இருக்கிறதா? என்று தேடி பார்த்துள்ளனர். வீட்டில் பணம் மற்றும் நகைகள் ஏதும் கிடைக்காத நிலையில், இதனை தேடிய களைப்பில் பசி ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து சமயலறைக்குள் பாத்திரத்தில் கமகமக்க சுவையான மீன் குழம்பு இருந்துள்ளது. பக்கத்திலேயே சாதமும் இருக்கவே, கொள்ளையர்கள் விருந்து சாப்பாடு போல மீன் குழம்பை மொட்டை மாடிக்கு எடுத்து சென்று சாப்பிட்டு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.  

காலையில் எழுந்து பார்த்த தம்பதிகள், சமையலறை கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனனர். ஆனால் வீட்டில் பணம் நகை ஏதும் திருடப்படாமல் இருந்துள்ளது. இதனையடுத்து சமயலறைக்குள் சென்று பார்க்கையில், பாத்திரம் காணவில்லை. 

இதன் பின்னரே  திருடர்கள் மீன் குழம்பை சாப்பிட்டு சென்றது தெரியவந்துள்ளது. மேலும், இதனைப்போன்று மற்றொரு வீட்டில் திருட முயற்சித்து, அது தோல்வியில் முடிந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari thief eats home police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->