மரக்கிளையால் வந்த சண்டை.. பக்கத்து வீட்டுக்காரரின் காதை கடித்து துப்பிய பகீர் சம்பவம்..!! - Seithipunal
Seithipunal


முன்பகை காரணமாக நடந்த சண்டையில், தொழிலாளியை பிடித்து காதை கடித்து குதறிய இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள எள்ளுவிளை கிராமத்தைச் சார்ந்தவர் சுமை தூக்கும் தொழிலாளி ராஜன். இவரது வீட்டில் மாமரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தின் கிளைகள் பக்கத்து வீட்டை சேர்ந்த மோகன் என்பவரின் வீடு மீது படர்ந்து கிடந்துள்ளது. 

இந்த மரத்தின் காய்ந்த இலைகள் அதிகமாக உதிரும் நிலையில், மரத்தை வெட்டி அகற்றுமாறு ராஜனிடம் மோகன் கூறியுள்ளார். இதனால் இவர்களுக்குள் தகராறு இருந்துள்ளது. இதுதொடர்பான புகாரை விசாரித்த காவல்துறையினர், மோகனின் இல்லத்திற்குள் மரக்கிளை செல்லாதவாறு, அங்கு செல்லும் மரக்கிளையை வெட்ட இரண்டு மாத காலம் அவகாசம் வழங்கி உள்ளனர். 

இந்நிலையில், மண்டைக்காடு கோவிலுக்கு செல்வதற்காக தனியாகப் புறப்பட்ட ராஜனை வழிமறித்த ஜெயமோகன், தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை தாக்கியுள்ளார். அப்போது எதிர்த்து அடித்த ராஜன் மீது பாய்ந்த மோகன், அவரது இடது பக்க காதை கடித்து குதறி உள்ளார். 

இதில் பாதியளவு காது காணாமல் போன நிலையில், மோகன் கூட்டாளிகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். காயமடைந்து சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜன், சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளார். 

பின்னர், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் மோகன் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். ராஜனின் பாதியளவு காது தற்போது வரை கிடைக்கவில்லை.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Neighborhood Fight Person Bite Ear Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->