ஆயுதப்படை காவல் அதிகாரி டார்ச்சர்.. மனைவி தூக்கிட்டு தற்கொலை?.. காவல்துறை விசாரணை.!
Kanyakumari Nagarcoil woman Suicide due to Husband Torture Husband is Armed Police Branch
கரு கலைந்ததால் ஆயுதப்படை காவல் அதிகாரி கணவர் செய்த கொடுமையால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு மேலத்தெரு பகுதியை சார்ந்தவர் நாகராஜன் (வயது 28). இவர் நாகர்கோவில் ஆயுதப்படையில் காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், கொட்டாரம் பெருமாள்புரம் பகுதியை சார்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகள் ஷிவானிக்கும் (வயது 22) கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினத்தின் போது ஷிவானி செய்த சமையல் பிடிக்கவில்லை என்று நாகராஜன் கூறவே, மனைவியிடம் தகராறு செய்துவிட்டு கணவர் பணிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டின் கதவை பூட்டிய ஷிவானி நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
நாகராஜனின் குடும்பத்தினர் நீண்ட நேரம் காத்திருந்து பின்னர் ஷிவானியின் குடுமப்த்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த ஷிவானியின் உறவினர்கள். உள்ளே சென்று பார்க்கையில் ஷிவானி தூக்கில் தொங்கியுள்ளார்.
இவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவே, ஷிவானியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக ஷிவானியின் பெற்றோர் தென்தாமரைக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்த புகாரில், " எனது மகளின் மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. திருமணத்தின் போது 95 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 இலட்சம் ரொக்கம் ஆகியவை கொடுக்கப்பட்டது. ஷிவானி கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக கர்ப்பமடைந்தார். திடீரென அவரின் கரு கலைந்தது.
கரு கலைந்ததற்கு எனது மகள் தான் கரணம் என்று நாகராஜனின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்தனர். மன உளைச்சலில் ஷிவானி தற்கொலை செய்துள்ளார் " என்று கூறியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், திருமணம் முடிந்து ஒன்றரை வருடமே ஆவதால் நாகர்கோவில் கோட்டாட்சியரும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kanyakumari Nagarcoil woman Suicide due to Husband Torture Husband is Armed Police Branch