தாயை நண்பர்களுடன் சேர்ந்து கொடுமைப்படுத்திய தந்தை.. போலீசுக்கு வீடியோ அனுப்பிய மகள்கள்.. குடிகாரன் எஸ்கேப்.!
Kanyakumari Man Torture Wife Daughter Sent Video to Police Now Family Escape fear of Investigation
மகள்கள் முன்னிலையில் கூட்டாளிகளுடன் சேர்ந்து மனைவியை அடித்து கொடுமை செய்த குடிகார கணவன் குறித்த வீடியோ வெளியான நிலையில், கைதுக்கு பயந்து குடும்பத்தோடு தலைமறைவாகி இருக்கிறான்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாழவச்சகோஷ்டம் பகுதியை சார்ந்தவர் சுஜின். இவன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக, தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மது விருந்து கொண்டாடியுள்ளான். நண்பர்கள் மற்றும் உறவினர்களை வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டாடிய நிலையில், போதையில் எல்லைமீறிய நண்பர்களை சுஜினின் மனைவி கிரிஜா கண்டித்த இருக்கிறார்.
மேலும், மது குடிக்க நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்த கணவனையும் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன் சுஜின், தனது குடிகார நண்பர்களுடன் சேர்ந்து மனைவி கிரிஜாவை தாக்கி துன்புறுத்த தொடங்கியுள்ளான். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. கணவர் தன்னை அடித்து போதும், குடிகார கூட்டாளிகளுடன் சண்டையிட்டு வந்த நிலையில், மனைவியை கம்பால் விரட்டிவிரட்டி தாக்கி இருக்கிறார்.
தனது தாய்க்கு நடக்கும் கொடுமையை கண்டு கொதித்தெழுந்த மகள்கள், தங்களது செல்போனில் இதனை வீடியோவாக பதிவு செய்தபடியே, " நீங்கள் அனைவரும் உள்ளே செல்வீர்கள் " என்று எச்சரித்துள்ளனர். போதையில் என்ன நடக்கிறது? என்ன செய்கிறோம்? என்பது உணராமல் கிரிஜாவை தொடர்ந்து அடித்து துன்புறுத்திய நிலையில், அவர் அழுதபடியே கணவரிடம் ஞாயம் கேட்டுக்கொண்டிருந்தார்.
இதுதொடர்பான வீடியோவை பதிவு செய்த மகள் இருவரும் காவல்துறையினரின் கவனத்திற்கு அனுப்பி வைக்கவே, காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். மறுநாள் காலையில் தவறுக்கு மன்னிப்பு கேட்பதாக கூறி சுஜின் மனைவியின் காலில் விழுந்தாலும், காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துவிட்டனர்.
இதனால் காவல் துறையினர் விசாரணைக்கு சுஜினை அழைக்கவே, கைதுக்கு பயந்துபோன சுஜின் குடும்பத்துடன் தலைமறைவாகி இருக்கிறான். மனைவி கணவன் என்ற முறையில் மனிதாபிமானம் பார்த்து மன்னிக்க தயாராக இருந்தாலும், வரும் நாட்களில் இதுபோன்ற செயல்கள் தொடரலாம் என்பதால் காவல் துறையினர் சுஜினை கண்டிக்க அழைத்துள்ளனர். குடிகாரனின் போதை தற்போது அவனை தலைமறைவாகவைத்துள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kanyakumari Man Torture Wife Daughter Sent Video to Police Now Family Escape fear of Investigation