மனைவியின் கள்ளக்காதலன் ஓட ஓட வெட்டி கொலை..! குமரியில் பரபரப்பு சம்பவம்..!! - Seithipunal
Seithipunal


குமரி மாவட்டம் மேலமணக்குடியை சேர்ந்தவர் சூசை மிக்கேல். இவருக்கு திருமணமாகி ஜெனி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், ஜெனிக்கும் கீழமுட்டம் பகுதியை சேர்ந்த ஜான்பால் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இந்த விவகாரம் ஜெனியின் கணவருக்கு தெரியவே இருவரையும் கண்டித்துள்ளர். ஆனால் அவர்களிண் பழக்கம் மேலும் நெருக்கமானது. இதனால் மனைவியை அதிக கெடுபிடிகளுடன் நடத்தியுள்ளார். இதனையடுத்து, அவர்கள் இருவரும் சந்திக்க முடியாமல் போனது. 

இதற்கிடையில் சூசை மிக்கேல் வேலைக்கு சென்ற நேரத்தில் ஜெனி தனது காதலருடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதனை அறிந்த சூசை மிக்கேல் அதிர்ச்சியானார். ஜான்பால் மற்றும் ஜெனி இருவரும் தலக்குளம் உடையார் பள்ளத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர் என்று மிக்கேலுக்கு தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து, மிக்கேல் அங்கு செல்கையில் அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததை கண்டு ஆத்திரமடைந்துள்ளார். அவர்களுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அவர் வைத்திருந்த அரிவாளால் ஜான்பாலை ஓட ஓட விரட்டி வெட்டுயுள்ளார். இதில் சம்பவ இட்த்திலேயே ஜான்பால் உயிரிழந்தார். ஜெனி படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார்.

பொதுமக்கள் திரண்டு விட்டதால் அங்கிருந்து சூசை மிக்கேல் தப்பி சென்றுவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெனியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து சூசை மிக்கேலை தேடி வந்த நிலையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Man Murder due to Affair Police Arrest Culprits 12 Aug 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->