உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட வக்கீல் தூக்கிட்டு தற்கொலை.. மகனின் உடலை பார்த்து கதறியழுத தாய்..!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சி அருகேயுள்ள சேரமங்கலம் கன்னிவிளை பகுதியை சார்ந்தவர் அனீஸ் (வயது 35). இவர் நாகர்கோவிலில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். 

இவருக்கு தற்போது வரை திருமணம் ஆகாத நிலையில், தனது தாயாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்னதாக வயிற்று வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில், அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட புண் தற்போது வரை ஆறவில்லை. 

இதனால் அனிஷ் மனமுடைந்து காணப்பட்ட நிலையில், நேற்று காலை மாடிக்கு சென்றவர் மாலை நீண்ட நேரம் ஆகியும் கீழே வரவில்லை. இதனால் அனீஷின் தாய் சுலோக்சனா மாடிக்கு சென்று பார்க்கையில், கதவை தட்டியும் சத்தம் இல்லாமல் இருந்துள்ளது. 

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில், அனீஸ் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனைக்கண்ட தாய் சுலோக்சனா கதறியழுத நிலையில், இது தொடர்பாக மணவாளக்குறிச்சி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அனீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Lawyer Anish Suicide due to Health issue 26 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->