கள்ளகாதலியுடன் புதிய வாழ்க்கை தொடங்க பிளான்.. கோழியமுக்குவது போல கள்ளக்காதல் ஜோடியை தூக்கிய காவல்துறை.! - Seithipunal
Seithipunal


கள்ளகாதலியுடன் வாழ்க்கை நடந்த ரூ.18 இலட்சம் கடனுடன் கடத்தல் நாடகம் ஆடி, கள்ளகாதலியின் வீட்டில் உல்லாசமாக இருந்த நபரை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை கரைசுத்துப்புத்தூர் பகுதியை சார்ந்தவர் சுரேஷ் (வயது 29). இவர் திசையன்விளை - இடையன்குடி சாலையில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி இரவு நேரத்தில் வழக்கம்போல பணிக்கு சென்றவர், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. 

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை செய்து வந்தனர். இதன்போது, திசையன்விளை - ஆணைக்குடி சாலையில் சுரேஷின் இருசக்கர வாகனம், இனிப்புகள் வைத்திருந்த அட்டை பெட்டியில் இரத்தக்கறை ஆகியவற்றுடன் இருந்துள்ளது. 

இதனையடுத்து காவல் துறையினர் சுரேஷ் கடத்தி செல்லப்பட்டு இருக்கலாம் அல்லது கொலை முயற்சி நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்த நிலையில், அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

இதில், சுரேஷ் வழக்கமாக வீட்டிற்கு செல்லும் பாதையில் செல்லாமல் மாற்று பாதையில் சென்றது தெரியவந்த நிலையில், அவரின் அலைபேசி சிக்னலை வைத்து காவல் துறையினர் அவரை தேடி வந்துள்ளனர். நேற்று சுரேஷின் செல்போன் சிக்னல் ஆணைக்குடி பகுதியில் காண்பிக்கவே, காவல் துறையினர் அவரை தேடுகையில் நள்ளிரவு நேரத்தில் பெண்ணின் இல்லத்தில் இருந்துள்ளார். 

அவரிடம் நடந்த விசாரணையில், " தூத்துக்குடி பகுதியை சார்ந்த 32 வயது பெண்மணிக்கு திசையன்விளையை சார்ந்த நபருடன் திருமணம் முடிந்துள்ளது. திருமணமான பெண்மணி கடந்த ஒருவருடத்திற்கு முன்னதாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கரைசுத்துப்புத்தூர் பகுதிக்கு வந்து தனியாக வசித்து வந்துள்ளார். 

இதன்போது இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த கள்ளக்காதல் பழக்கம் அதிகளவு நெருக்கத்தை ஏற்படுத்தி, ஒருகட்டத்தில் நீயில்லாமல் நானில்லை என்று வசனம் பேசியுள்ளனர்.

இதனையடுத்து இருவரும் எங்காவது சென்று பிழைத்துக்கொள்வோம் என்று முடிவு செய்த நிலையில், சுரேஷுக்கு ரூ.18 இலட்சம் கடன் இருந்துள்ளது. இந்த கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க கடத்தல் நாடகம் போட்டு, கடந்த 15 ஆம் தேதி ரூ.2 இலட்சம் வேறொரு இடத்தில் இருந்து கைக்கு கிடைத்ததும் வீட்டிற்கு இனிப்பு வாங்கிவிட்டு வருவதாக மனைவிக்கு தகவல் தெரிவித்து நாடகமாகியுள்ளார். 

மேலும், பணம் இருக்கிறது என்பதை அழுத்தி வீட்டாரிடம் சொன்ன நிலையில், இருசக்கர வாகனத்தை காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று கடத்தல் நாடகம் போல ஏற்பாடுகள் செய்து, நள்ளிரவு நேரத்தில் கள்ளகாதலியின் இல்லத்தில் உல்லாசமாக இருந்துள்ளார். இரத்தக்கறை தொடர்பாக காவல் துறையினர் பார்த்து நம்புவதற்கு புறாவை கொலை செய்து, அதன் இரத்தத்தை இனிப்பு மற்றும் இருசக்கர வாகனத்தில் படும்படி கொட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தொடர் விசாரணை நடந்து வருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Illegal Affair Man Drama Kidnap to Start New Life with Affair woman


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->