திண்டுக்கல் சாரதியை போல ஒரு சந்தேக பிராணி.. மனைவியை கொடூர கொலை செய்த பயங்கரம்..!! - Seithipunal
Seithipunal


மனைவி மீது சந்தேகப்பட்டு தொல்லை செய்து வந்த கணவன் என்ற கொடூரன், இறுதியில் அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. 

நடிகர் கருணாஸ் நடிப்பில் வெளியான திண்டுக்கல் சாரதி திரைப்படத்தில், கருணாஸை விட கதாபாத்திரத்தில் நடித்த கதாநாயகி அழகாக இருந்த நிலையில், கருணாசுக்கு தனது மனைவி மீது சந்தேகம் ஏற்படும். இதற்காக பல சித்து வேலைகள் செய்து இறுதியில் பைத்தியக்காரனாக மாறிய கருணாஸ் திருந்துவது போல அப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். 

இந்நிலையில், ஒரு உண்மை சம்பவத்தில் பயங்கர கொலை அரங்கேறியது நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் வாகனங்களுக்கு சீட் கவர் செய்து கொடுக்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். 

இவரது மனைவி உமா. உமா இயல்பாக அழகாக இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தனது மனைவியை பிறர் பார்த்து விட கூடாது என்பதில் கவனமாக இருந்த ரமேஷ், அனாவசியமாக மனைவி மற்றும் குழந்தைகளை வெளியில் கூட அழைத்துச் செல்ல மாட்டார் என்றும் கூறப்படுகிறது. 

மேலும், வீட்டில் கூட எவரும் எட்டிப் பார்த்து விடக்கூடாது என்பதால், மதில் சுவரையும் வீட்டினை சுற்றி பெரிதாக கட்டியுள்ளார். டெய்லரிங் முடித்த உமா பெண்களுக்கு ஜாக்கெட் தைத்து கொடுக்கும் பணி செய்து வந்த நிலையில், துணி தைக்க கொடுத்த பெண்களிடம் உமா போனில் பேசினாலே கொடூரன் சந்தேகமாக பார்த்து வந்துள்ளான். 

கணவரின் தொல்லை தாங்க முடியாத மனைவி, கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவி வேறு யாருடனோ சென்றுவிட்டார் என்று எண்ணிய ரமேஷ், அவரின் தாய் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். இதன்போது மனைவி அவரின் தாய் வீட்டில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரமேஷ், மனைவியை சமாதானப்படுத்தி தனது இல்லத்திற்கு அழைத்து வந்துள்ளார். 

இந்நிலையில், சம்பவத்தன்று மனைவியின் செல்போனுக்கு அழைப்பு விடுத்த நிலையில், உமா மற்றொரு பெண்மணியுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதன்போது, பதிவுசெய்யப்பட்ட அழைப்பு குரலில் தாங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் மற்றொருவருடன் பேசிக்கொண்டு இருக்கிறார், தொடர்பில் காத்திருங்கள் அல்லது பின்னர் அழையுங்கள் என்று கூறியுள்ளார். 

இதனால் உச்சகட்ட சந்தேகத்திற்கு உள்ளாகிய கொடூரன் ரமேஷ் வீட்டிற்கு சென்று மனைவியிடம் சண்டையிட்ட நிலையில், ஆத்திரம் தாளாது நள்ளிரவில் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து இருக்கிறார். தாயின் அலறல் சத்தம் கேட்டு விழித்த குழந்தைகள் அலறவே, அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ரமேஷை சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில், ரமேஷின் சந்தேகம் தொடர்பான விபரம் தெரியவந்த நிலையில், தாயை இழந்த பிள்ளைகள் இரண்டு குழந்தைகளும் அனாதையாக தவித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Husband Ramesh Murder wife Uma due to Doubts Like Dindigul Sarathy Movie 17 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->