இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காவல் அதிகாரி.. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்மணி கண்ணீர் புகார்.!!
Kanyakumari girl sexual abuse police investigation
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்காடு கிராமத்தை சார்ந்த இளம்பெண், அங்குள்ள காவல் நிலையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக புகார் அளிக்க சென்றுள்ளார்.
இந்த நேரத்தில், பெண்ணிற்கு உதவி செய்வதாக கூறி அறிமுகத்தை ஏற்படுத்திய உதவி ஆய்வாளர், பெண்ணின் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்திற்கு சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவருகிறது.
மேலும், இதனால் கர்ப்பிணியான பெண்மணியை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலன் இல்லை.
இதனால் பெண்மணி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்கவே, இது குறித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் காவல் துறையினருக்கு விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kanyakumari girl sexual abuse police investigation