குழந்தை, மனைவி பணம் மற்றும் நகையுடன் கடத்தல்?.. கணவர் கண்ணீர் புகார்.!!
Kanyakumari girl missing with child and money police investigation
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை மூலச்சல் கிருஸ்து நகர் பகுதியை சார்ந்தவர் ஜாபர் சிங் (வயது 38). இவர் நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை வழங்கியுள்ளார். இந்த புகார் மனுவில்,
" நான் அரபு நாட்டில் பணியாற்றி வருகிறேன். எனக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனது மனைவி நடன பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நான் அரபு நாட்டில் சம்பாத்தியம் செய்த பணத்தை மனைவிக்கு தவறாமல் அனுப்பி வைத்தேன்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நான் சொந்த ஊருக்கு வந்த நிலையில், வீட்டிற்கு சென்ற போது மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை. இது குறித்து எனது உறவினர்களிடம் விசாரணை செய்தேன்.
அதில், எனது மனைவி மற்றும் குழந்தைகளை 53 சவரன் நகை மற்றும் ரூ.3 இலட்சம் பணத்துடன் தக்கலை வாலிபர் கடத்தி சென்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும், எனது மனைவியை பெண்ணொருவரின் உதவியுடன் அந்த வாலிபர் கடத்தியுள்ளார்.
எனது மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டு தர வேண்டும். எனது பணம் மற்றும் நகையையும் மீட்டு தர வேண்டும். சம்பந்தப்பட்ட வாலிபரின் மீதும், பெண்ணின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று கூறியுள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kanyakumari girl missing with child and money police investigation