திருமணமாகும் உற்சாகத்தில் இருந்த மாப்பிள்ளைக்கு, மணப்பெண்ணின் கணவன் கொடுத்த ஷாக்.. கன்னியாகுமரியில் திகீர்.!
Kanyakumari girl go with Love Husband
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் வெட்டுவெண்ணி பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்மணி ஷாமிலி. இவர் பிஎஸ்சி நர்சிங் முடித்து விட்டு, தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், பெற்றோர் ஏற்பாட்டின்படி நேற்று ஷாமிலிக்கும் இடையே திருமணம் நடைபெற இருந்தது.
இதற்காக கடந்த 13 ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த நிலையில், மணமகனின் அருகில் மணப்பெண் அலங்காரத்தில் இருக்கவே, இரண்டு வீட்டு உறவினர்களும் வாழ்த்திக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், மகளிர் காவல் துறை அதிகாரிகளுடன் மேடை ஏறிய இளைஞர் ஒருவர், ஷாமிலி தனது மனைவி என்றும், தங்களுக்கு ஏற்கனவே திருமணம் நடை பெற்று விட்டதாகவும், இப்போது கட்டாயத் திருமணம் நடைபெறுகிறது என்றும் கூறியுள்ளார்.
இதனால் திருமண வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மறுநாள் தாலி கட்டும் மகிழ்ச்சியில் இருந்த மாப்பிள்ளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதன் பின்னர் பெண்ணோடு, பெண் வீட்டாரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல்துறையினர், அங்கு வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், ஷாமிலி கல்லூரியில் படித்த சமயத்தில் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த ராஜூ என்பவரை காதலித்து வந்ததும், கடந்த செப்டம்பர் மாதம் வீட்டில் தோழியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்வதாக கூறி தர்மபுரி சென்ற ஷாமிலி, காதலன் ராஜுவை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதன் பின்னர் திரைப்பட பாணியில் அவரவர் வீட்டில் வசித்து வந்த நிலையில், அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தால் இருவரும் நேரில் சந்திக்க இயலாது அலைபேசியில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதனிடையே ஷாமிலிக்கு அவரது பெற்றோர், அதே கிராமத்தைச் சார்ந்த இளைஞருடன் திருமணம் முடித்து வைக்க முடிவு செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்ததும், தனது காதல் மனைவியை மீட்பதற்காக பலமுறை இ-பாஸ் வேண்டி விண்ணப்பித்தபோதும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதன் காரணமாக காதலின் முகவரியை கண்டுபிடித்து, காதலன் 13 ஆம் தேதி குழித்துறை மகளிர் காவல் நிலையத்தில் உதவியை நாடியுள்ளார். இதன் பின்னர் ஷாமிலி தனது காதல் கணவருடன் செல்வதற்கு விருப்பம் தெரிவித்ததாலும், இருவரும் மேஜர் என்ற காரணத்தாலும் பாதுகாப்புடன் தருமபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kanyakumari girl go with Love Husband