ஊரடங்கால் பறிபோன வருமானம்.. குடும்பத்தோடு எடுத்த முடிவு.. விளையாடிய விதி.!!
Kanyakumari family members suicide attempt
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரம் பகுதியை சார்ந்தவர் மணிகண்டன் (வயது 41). இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி (வயது 38). இவர்களுக்கு 14 வயதுடைய ரவீனா என்ற மகள் இருக்கிறார். கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னதாக மணிகண்டன் குடும்பத்துடன் அங்குள்ள இலட்சுமிபுரம் பகுதியில் குடியேறியுள்ளார்.
அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த நிலையில், நேற்று முன்தினம் குடும்பத்துடன் வீட்டில் விஷம் அருந்தி மயக்க நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இவர்களுக்கு அங்கு சிகிச்சை வழிபட்டு வரும் நிலையில், கடந்த 9 மாதத்திற்கு முன்னர் வாங்கிய கடன் சுமை அதிகரித்ததும், ஊரடங்கால் கடன் தொல்லை மேலும் அதிகரித்து குடும்பமே தற்கொலை முடிவு எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் பரிதமாக நேற்று உயிரிழக்கவே, மனைவி, மகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Kanyakumari family members suicide attempt