நெருக்கமான விடியோவை வைத்து பணம்பறித்த காமுகன்.. குமரியில் அடுத்த பகீர் சம்பவம்.!!
Kanyakumari culprit cheat girl sexual abuse
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் காமுகன் காசி மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து பெண்களை ஆபாச படமெடுத்து மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்து, பணம் பறித்து வந்த சம்பவம் பெரும் அதிர்வலையை தமிழகம் முழுவதும் பதிவு செய்தது. இந்நிலையில், இதனைப்போன்று மற்றொரு கொடூரம் அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி பகுதியை சார்ந்த 2 குழந்தைகளின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரில், எனது மனைவிக்கும், மகேஷ் இளங்கோ என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது நாளடைவில் நெருக்கமாகி, இருவரும் நெருக்கமாக இருந்த சூழலில் வீடியோ பதிவும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், எனது மனைவியிடம் ஆசை வார்த்தையை கூறிய கொடூரன், பணம் வாங்கியுள்ளான்.. சிறிது சிறிதாக ரூ.10 இலட்சம் மொத்தமாக வாங்கியுள்ளேன். பின்னர் பணத்தை எனது மனைவி கேட்கையில், தனது சுயரூபத்தை வெளிப்படுத்த துவங்கியுள்ளான். பணம் குறித்து கேட்டால் அந்தரங்க விடியோவை இணையத்தில் பதிவு செய்திருவேன் என்றும் மிரட்டியுள்ளான் என்று கூறியுள்ளார்.
இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மகேஷ் இளங்கோவின் மீது பல வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு சேட்டுள்ளனர். இந்த விஷயத்தை அறிந்த இளங்கோவன் தலைமறைவாகியுள்ள நிலையில், காமுகனை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Kanyakumari culprit cheat girl sexual abuse