வெறும் சாலையில் வில்லங்க வேகத்தில் பயணம்.. எதிரே வந்த எமனிடம் தப்பிக்க திரைப்படத்தை மிஞ்சிய ஸ்டண்ட்.!!
Kanyakumari Car Accident at Marthandam Bridge Video goes Trending Viral
மார்த்தாண்டத்தில் முன்னாள் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட கார், தலைகுப்புற திரைப்பட காட்சிகள் போல கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் வேர்கிளம்பி பகுதியைச் சார்ந்தவர் அனில்குமார். இவர் தனது சகோதரி மற்றும் குழந்தைகளுடன் அங்குள்ள அதங்கோடு பகுதிக்கு காரில் சென்றுள்ளார்.
இவர்களின் கார் மார்த்தாண்டம் அருகேயுள்ள மேம்பாலத்திற்கு அருகே சென்றபோது, முன்னே சென்ற வாகனத்தை இவரது கார் அதிவேகமாக முந்திச் செல்ல முயன்றுள்ளது. இதன் போது, எதிர்ப்புறத்தில் ஒரு கார் வந்துளளது.
எதிரே வந்த காரின் மீது மோதாமல் இருக்க வாகனத்தை வேகமாக திரும்பியதால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
நல்ல வேலையாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஊரடங்கில் பெரும்பாலும் வாகனங்கள் வெறிசோடி கிடக்கிறது என்று எண்ணி அதிவேகத்தில் பயணம் செய்தால், எதிரே எமன் எப்படி வருகிறான் என்பது தெரியாது. அதிவேகம் என்றுமே எப்போதுமே ஆபத்தானது என்பதை உணர வேண்டும்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kanyakumari Car Accident at Marthandam Bridge Video goes Trending Viral