அதிமுக பிரமுகர் தற்கொலை.. வெளியான பதைபதைப்பு கடிதம்.!
Kanyakumari AIADMK Supporter Suicide due to Family Issue 15 April 2021
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் ராமபுரம் கொத்தன்குளம் பகுதியை சார்ந்தவர் முரளிகாந்த் (வயது 45). இவருக்கும், தோவாளை பகுதியை சார்ந்த சரிதா என்ற 38 வயது பெண்மணியுடன் கடந்த 18 வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. சரிதா அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளராக இருந்து வருகிறார்.
இவர்களுக்கு அபிஷேக் என்ற 17 வயது மகனும், அபிஷா என்ற 16 வயது மகளும் இருக்கின்றனர். திருமணத்திற்கு பின்னர் முரளிகாந்த் தனது மனைவியின் ஊரான தோவாளையில் உள்ள புத்தூர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இதன்பின்னர், குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்று முரளி பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் சொந்த ஊருக்கு விடுமுறைக்கு வந்திருந்த நிலையில், முரளிக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டு அவ்வப்போது தம்பதிகள் சண்டையிட்டு வந்துள்ளனர். இதனால் மனமுடைந்து போன முரளி கொத்தன்குளம் பகுதியில் உள்ள தம்பியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர், நேற்று மன வருத்தத்தை உச்சிக்கு சென்ற முரளி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இவரை மீட்ட உறவினர்கள் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலனில்லாது, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவரின் தற்கொலைக்கு காரணமாக என்ன காரணம் என்பது தொடர்பான கடிதம் சிக்கியுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kanyakumari AIADMK Supporter Suicide due to Family Issue 15 April 2021