பணியிட பெண்ணிற்கு கொட்டும் மழையில் அவதூறு பேசி பாலியல் தொல்லை.. அதிமுக பிரமுகர் கொடூரம்.!!
Kanyakumari admk party member sexual torture police arrest
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகில் ஆண்டனா டிஷ் கடை நடத்தி வரும் நபர் குமார் (வயது 27). இவர் பத்மநாபபுரம் அதிமுக முன்னாள் நகர செயலாளர் ஆவார். மேலும், அதிமுக கட்சியின் தீவிர விசுவாசி ஆவார்.
இந்நிலையில், நேற்று அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த நிலையில், சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து இருந்துள்ளது. பிற கடைகளிலும் வியாபாரம் இல்லாததால், கடையின் உரிமையாளர்கள் கடைக்குள்ளேயே முடங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையில், குமார் தனது கடையில் பணியாற்றி வரும் இளம் பெண்ணிற்கு முன்னால் நின்றுகொண்டு, மழையில் நனைந்து சட்டையை கழட்டி ஆபாச வார்த்தைகளால் பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், தகவலை அறிந்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், பெண்ணும் மழையில் நனைந்தபடி ஆவேசமாக குமாரிடம் சண்டையிட்டுக் கொண்டு இருந்துள்ளார்.
இதனையடுத்து குமாரை கைது செய்த காவல்துறையினர், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குமாரின் கடையில் மாதத்திற்கு ஒரு பெண் பணியாற்றுவார் என்றும், குமாரின் பாலியல் தொந்தரவு காரணமாக அவரது கடைக்கு விபரம் அறியாமல் வரும் பெண்கள் அவருடன் பணியாற்ற விரும்புவதில்லை என்றும் கூறியுள்ளனர்.
மேலும், குடும்ப வறுமைக்காக இளம்பெண்கள் பணியாற்ற வரும் நிலையில், மாதம் ரூ.3000 சம்பளம் மட்டுமே வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இது போன்ற அராஜக செயலிலும் அவர் ஈடுபட்டு வருவதை விளக்கமாகவும் வைத்துள்ளார் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kanyakumari admk party member sexual torture police arrest