+2 மாணவி பாலியல் பலாத்காரம்.. கல்லூரி மாணவன் கைது..! காதல் போர்வையில் கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


பனிரெண்டாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தேரூர், புதுக்கிராமம் காலனியை சார்ந்தவர் ராம் நரேஷ் குமார் (வயது 19). இவன் நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று வருகிறான். கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக நாகர்கோவிலில் இருக்கும் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளான். 

இதன்போது, அப்பள்ளியில் பயின்று வந்த வில்லுக்குறி பகுதியை சார்ந்த மாணவியிடம் பழகி வந்துள்ளான். இந்த நட்பை காதலாக மலர வைத்த நரேஷ் குமார், மாணவியை காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறான். மாணவியும் ராம் நரேஷ் குமாரை காதலித்து வந்துள்ளார். 

கடந்த மார்ச் மாதம் வீட்டில் மாணவி தனியாக இருந்த நிலையில், அவரது வீட்டிற்கு சென்ற நரேஷ் குமார் ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதன்போது, மாணவி பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். 

இந்த நிலையில், தற்போது மாணவியின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டறிந்த தாயார், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளார். இதன்போது, மாணவி கர்ப்பமாக இருந்தது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிய மாணவியின் தாயார், இதுகுறித்து குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் ராம் நரேஷ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari 12 th Class Girl Sexual Abused by College Student Now She Pregnant Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->