மாணவிகள் தான் காதல் கடிதம் கொடுத்தனர் - ஆபாச ஆசிரியருக்கு ஆதரவாக போர்க்கொடி தூக்கும் ஆசிரியர்கள் சங்கம் !
Kanniyakumari Kiruthudoss Case
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக பணியாற்றும் கிறிஸ்துதாஸ், மாணவிகளுக்கு ஆபாச வகுப்பு நடத்தி வந்ததாக, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கிறிஸ்துதாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் சங்கத்தின் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
பள்ளி மாணவிகள் இருவர், ஆசிரியருக்கு காதல் கடிதம் எழுதியிருந்ததாகவும், அதனைப்பார்த்த ஆசிரியர் கிறிஸ்துதாஸ், பெற்றோர்களை அழைத்து வருமாறு மாணவிகளிடம் கூறியதாகவும், பயத்தில் மாணவிகள் ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளதாக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறையானது துறை ரீதியான விசாரணையில் கிறிஸ்துதாஸ் குற்றமற்றவர் எனவும், மூன்றாவது தரப்பினரின் தலையீட்டால் போலீசார் உரிய விசாரணை இன்றி கிறிஸ்துதாஸை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் கிருஸ்துதாஸ் மீதான வழக்கை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிவிடுத்துள்ளனர்.
English Summary
Kanniyakumari Kiruthudoss Case