கன்னியாகுமரியில் மூவர் இறந்த விவகாரம்.. அதிகாரபூர்வ தகவலை உறுதி செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்.!!
kanniyakumari hospital peoples death reason is not corona
குமரி கரோனா வார்டில் அனுமதியான 3 பேர் அடுத்தடுத்து பலியாகியிருந்தது தொடர்பான விவகாரத்தில், இவர்களின் இறப்பிற்கு கரோனா காரணம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதியாகியிருந்த 2 பேர் ஏற்கனவே பலியாகியிருந்த நிலையில், தற்போது மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர்.
இவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்படாத நிலையில், இவர்களின் உயிரிழப்பு நடந்துள்ளது. மேலும், உயிரிழந்த நபர்களில் 2 வயது குழந்தை, ஒரு இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் இரத்த மாதிரிகள் திருநெல்வேலி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ முடிவுகள் தெரியவரும் பட்சத்திலேயே இவர்களின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், இவர்களின் இறப்பிற்கு கரோனா காரணம் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
kanniyakumari hospital peoples death reason is not corona