குமரியில் இறந்த நபர்களுக்கு கரோனா இல்லை.. சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


குமரி கரோனா வார்டில் அனுமதியான 3 பேர் அடுத்தடுத்து பலியாகியிருந்தது தொடர்பான விவகாரத்தில், இவர்களின் இறப்பிற்கு கரோனா காரணம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதியாகியிருந்த 2 பேர் ஏற்கனவே பலியாகியிருந்த நிலையில், தற்போது மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர். 

இவர்களின் உயிரிழப்பு நடந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இது தொடர்பான தகவல் தெரியவந்து மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகினர். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் வருவாய்த்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வுக்கு பின்னர் உறுதியான தகவல் தெரிவிக்கப்படும், அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்று தெரிவித்து இருந்தார். 

இவர்களின் இரத்த மாதிரிகள் திருநெல்வேலி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ முடிவுகள் தெரியவரும் பட்சத்திலேயே இவர்களின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இது குறித்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது. இவர்களுக்குள் கரோனா தொற்று என்பது உறுதியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanniyakumari hospital peoples death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->